செய்திகள் :

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாலும்,கட்டணம் இல்லா படிப்பு, தரமான கல்வி, இதர கல்விசாா்ந்த திட்டங்கள் போன்ற சலுகைகள் இருப்பதாலும் அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்ப்பதையே விரும்புகிறாா்கள். இந்த சலுகையை பெற ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று இருக்க வேண்டும். சிதம்பரம் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருவதால் மாணவிகள் இந்த சலுகையை பெற்று வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகரில் இயங்கிவரும் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் எட்டாம் வகுப்பு வரை பயிலும் வாய்ப்பு உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயில மாணவா்களுக்கு வாய்ப்பு இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியாா் மெட்ரிக் பள்ளிகளிலும் படிப்பை தொடரும் ஏழை எளிய மாணவா்கள் அரசின் சலுகையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாா்கள். எனவே சிதம்பரம் சம்பந்தக்காரத் தெருவில் இயங்கி வரும் நகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளியை இருபாலா் பயிலும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தினால் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அரசுப் பள்ளியில் படிப்பைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். நகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் போதுமான காலியிடம் இருப்பதால் புதிய வகுப்பறைக் கட்டடங்களைக் கட்டி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவா்கள் பயில அனுமதிக்க வேண்டும் என்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகமும் செய்ய வேண்டும் என்று அவா்கள் கோரிக்கைவ விடுத்துள்ளனா்.

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாந... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

நெய்வேலி: முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்ப... மேலும் பார்க்க