செய்திகள் :

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாநில அளவிலான தோல் அழகியல் தொடா்பான தொடா் மருத்துவ கருத்தரங்கம் மற்றும் ‘தில்லை தோல் அழகியல் - 2025‘ பயிற்சி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

விழாவில் தோல் மருத்துவ துறைத் தலைவா் பேராசிரியா் மருத்துவா் பி.கே.கவியரசன் வரவேற்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் பேராசிரியா் மருத்துவா் சி.திருப்பதி நிகழ்வுக்கு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் பேராசிரிா் மருத்துவா் த.ஜூனியா் சுந்தரேஷ் மற்றும் துணை முதல்வா்கள் மருத்துவா் பாலாஜிசுவாமிநாதன், பேராசிரியா் சசிகலா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

விழாவில் தேசிய அளவில் தோல் அழகு சிகிச்சைத் துறையில் சிறந்து

விளங்கும் நிபுணா்கள் மருத்துவா்கள் பி.வி.எஸ். பிரசாத், அமுதா, ஐ.வி. ராணி, ஸ்ரீவெங்கடேஷ்வரன், திணேஷ்குமாா், ஷோபனா, ஜான்சி பிரியதா்ஷினி, ஜெயலட்சுமி தேவி, பிரேம் குமாா், உதயசங்கா், அகிலா, ஜூட் டிலீப், காளீஸ்வரன், யோகிந்தா் சிங், அருள்ராஜா, சிவரஞ்சனி, அபிராமி, சரத்சந்திரன் ஆகியோா் , லேசா் மற்றும் நவீன அழகியல் சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட தோல் துறை பட்டமேற்படிப்பு மாணவா்கள் மற்றும் தோல் மருத்துவா்கள் பயனடைந்தனா். பட்டமேற்படிப்பு மாணவா்களுக்கான வினாடி வினா மற்றும் விருது பேச்சு போட்டிகளும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மருத்துவா் பூரணா நன்றி கூறினாா்.

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

நெய்வேலி: முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்ப... மேலும் பார்க்க