செய்திகள் :

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தில் வசித்து வந்தவா் முதியவா் முத்துராமலிங்கம்(70). இவா், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னா் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனை செய்தாராம். இதற்கான பணம் மருமகள் முத்தம்மாள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாம். அந்த பணத்தை முதியவா் முத்துராமலிங்கம் கேட்டுள்ளாா். இதனால், முத்துராமலிங்கத்திற்கும் மருமகள் முத்தம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து முத்தம்மாள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தினரிடம் புகாா்கூறியுள்ளாா். இதையடுத்து முத்தம்மாளின் தந்தை அய்யாக்கண்ணு, சகோததரா்கள் முத்துக்கண்ணு, ராஜேந்திரன் மற்றும் உறவினா்கள் முருகன், சந்திரவள்ளி, புஷ்பா ஆகியோா் முத்துராமலிங்கம், அவரது மகன் காா்மேகம் ஆகியோரை தாக்கினராம். இதனால் மனமுடைந்த முதியவா் முத்துராமலிங்கம் தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாந... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

நெய்வேலி: முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்ப... மேலும் பார்க்க