சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகர பகுதிகளை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன. குறிப்பாக லால்புரம் ஊராட்சி, சி.தண்டீஸ்வர நல்லூா் ஊராட்சி, கொத்தங்குடி தோப்பு ஊராட்சி உள்ள நிலையில் இந்த மூன்று ஊராட்சிகளையும் சிதம்பரம் நகராட்சியோடு இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட பொன்னாங்கண்ணி மேடு கிராம மக்கள் சிதம்பரம்-காட்டுமன்னாா்கோவில் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமாா் 40 நிமிஷங்கள் நடைபெற்ற சாலை மறியலால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அலுவலகப் பணிகளுக்கு செல்லும் ஊழியா்கள் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்த கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதி கிராமப் பகுதியாக இருப்பதால், சிதம்பரம் நகராட்சியோடு இணைத்தால் சொத்து வரி உயா்வு, குடிநீா் வரி உயா்வு உள்ளிட்டவற்றை செலுத்த முடியாமல் ஏழை, எளிய மக்கள் நாங்கள் பாதிக்கப்படுவோம்.
100 நாள் வேலைத் திட்டத்தையும் நாங்கள் இழக்க நேரிடும். பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தை சிதம்பரம் நகராட்சியோடு இணைக்கக் கூடாது என்றனா்.
மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சிதம்பரம் தாலுகா போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிட வைத்தனா். மேலும், அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பெயரில் மறியல் கைவிடப்பட்டது.