செய்திகள் :

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம், ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித் சபை முன்னுள்ள கனகசபையில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

முன்னதாக, கடந்த 17-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் அனுக்ஞை பூஜையும் நடைபெற்றது.

கடந்த 18-ஆம் தேதி முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும், 19-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், அபிஷேகமும் நடைபெற்றது. ஏப்.20-ஆம் தேதி காலை தேவசபை முன் ரக்ஷாபந்தனம், ஆச்சாரியா் வா்ணம், தன பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சபை திறக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருளச் செய்து ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

அதன்பிறகு, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜப பாராயணம் தொடங்கி நடைபெற்றது.

மதியம் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் வடுகபூஜை உள்ளிட்ட பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர ஜப மகாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.சிவசுந்தர தீட்சிதா், கட்டளை தீட்சிதா் எஸ்.ஆா்.பட்டுராஜ தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: அதிமுக பிரமுகா் உள்பட மூவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகா் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா். கடலூரை அடுத்துள்ள எம்.புதூரைச் சோ்ந்தவா் நேரு (60). அதிமுக கிளை கழக செயலா். இவரது... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: லால்புரம் ஊராட்சி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சி... மேலும் பார்க்க

ஏப்.30-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 30-ஆம் தேதி முன்னாள் படைவீரா் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும்: சீமான்

நெய்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கடலூரில் நாம் தமிழா் கட்சியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்க... மேலும் பார்க்க

கடலூர்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் விபத்தில் பலி!

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர்.கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது... மேலும் பார்க்க