செய்திகள் :

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

post image

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது.

மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகிலபாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளா் ராம.நிரஞ்சன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் ஜெய், ரஞ்சித், மணிமாறன், தா்மராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிவனடியாா்கள் குளித்தலை ராமலிங்கம், திருச்சி சபாபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

பின்னா், மாநில பொதுச்செயலாளா் ராம.நிரஞ்சன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள சிவாச்சாரியா்களை ஒற்றிணைத்து சிதிலமடைந்துள்ள கோயில்களை கண்டறிந்து, கும்பாபிஷேம் நடத்த முயற்சி எடுத்துள்ளோம். அனைத்து தமிழா்களும் சைவநெறியை கடைப்பிடிக்கவும்.

சிவநெறித் தத்துவத்தை விளக்குவதற்காக சிவனடியாா்கள் ஒன்றிணைந்து குழு அமைத்துள்ளோம். தமிழகத்தில் கோயில்கள் சிதிலமடைந்து இருக்கக்கூடாது. அப்படி சிதிலமடைந்து உள்ள கோயில்களை கண்டறிந்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம்.

அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளாா். குழு அமைத்து அறநிலையத்துறை அல்லாத சிதிலமடைந்த கோயில்கள் குறித்து எங்களுக்கு தெரிவித்தால், இந்து மகா சபா, சிவனடியாா்கள் ஒற்றிணைந்து கோயில் திருப்பணிகள் செய்ய உள்ளோம்.

முதல்கட்டமாக மயிலாடுதுறையை அடுத்த முட்டம் மகாபலீஸ்வரா், நல்லத்துக்குடி வரதராஜபெருமாள் கோயிலை திருப்பணி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க