செய்திகள் :

"சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்லாது" - மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலும் கலந்துகொண்டார்.

அமித் ஷா
அமித் ஷா

அதற்குப் பிறகு சி.ஆர். பாட்டீல் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு தேசிய நலனுக்காக முற்றிலும் நியாயமானது.

சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்வோம். வியாழக்கிழமை பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்துசாவுக்கு இந்த முடிவு குறித்து கடிதம் அனுப்பப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான திட்டம் விவாதிக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை உடனடியாகச் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விஜய் பயணித்த வாகன கதவு சேதம்; தொண்டர்கள் கொந்தளிப்பு - தவெக பூத் கமிட்டி கூட்ட அப்டேட்ஸ்

கோவையில் நடிகர் விஜய் பயணித்த கேரவன் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், தவெக பூத் கமிட்டி மாநாட்டுத் திடலுக்கு செல்ல மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.கோவை வந்த விஜய்... மேலும் பார்க்க

Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ - ஒமர் அப்துல்லா காட்டம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அ... மேலும் பார்க்க

Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - குற்றச்சாட்டு கூறியப் பெண் விபரீத முடிவு

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்... மேலும் பார்க்க

சேலம் வெடி விபத்து: 'முறையானப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை' - திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக பாட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்... மேலும் பார்க்க

Bihar : அப்செட்டில் நிதிஷ்; வேகமெடுக்கும் தேஜஸ்வி - பரபர பீகார் தேர்தல்!

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 13 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 8 கோடி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இங்குதான் இந்த ... மேலும் பார்க்க