செய்திகள் :

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

post image

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.

டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களுடன் முதல்வர் தாமி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய ஆயுதப்படைகள் தீர்க்கமான எதிர்த் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானிலிருந்த ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்து, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது. இந்திய மக்கள் நமது ராணுவத்துடனும், நாட்டுடனும் ஒற்றுமையாக நின்று ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடு தழுவிய திரங்கா யாத்திரையை பாஜக செவ்வாயன்று தொடங்கியது. இந்திய வீரர்களின் வீரத்தைக் கௌரவிப்பதையும், ஆப்ரேஷன் சிந்துரின் வெற்றியைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும் இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரங்கா யாத்திரை மே 23 வரை தொடர உள்ளது.

அப்பாவி இந்தியக் குடும்பங்களைக் குறிவைப்பதன் விளைவுகளை ஆபரேஷன் சிந்துர் மூலம் பயங்கரவாதிகளுக்கு இந்திய ஆயுதப்படை உணர்த்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தீர்க்கமான ராணுவ பதிலடியாக மே 7ல் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது, அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க