வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்ப...
சினாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஜம்மு - காஷ்மீரில் முக்கிய அணைகளின் அனைத்து மதகுகளும் திறப்பு!
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான சினாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராம்பன் மாவட்டத்தில் சினாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் கனமழையால் சினாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, ரியாசி மவட்டத்தில் அமைந்துள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டிருப்பதால் சினாப் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு பாதிப்புகளைத் தொடர்ந்து வைஷ்ணவி தேவி யாத்திரை கடந்த ஆக. 27முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.