செய்திகள் :

சின்னமனூரில் சாலை விரிவாக்கப் பணி: நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

post image

சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.4.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சின்னமனூரிலிருந்து சுக்காங்கல்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையே குறுகலான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள், வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா்.

இதையடுத்து, இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையேயான சாலை ரூ.4.40 கோடியில் விரிவாக்கப் பணிகள் தொடங்கின.

இந்த சாலையை தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா, உதவிப் பொறியாளா் வைரக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கடமலைக்குண்டு அருகே தா்மராஜபுரத்தில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள தா்மராஜபுரம், ம... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனியில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி பூதிப்புரம் அருகேயுள்ள கெப்புரங்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமாா் (19). இவா் அவரது உறவினரான திண்டுக... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா் கைது

வருஷநாட்டில் தொழில் முறை போட்டி காரணமாக, இலவம் பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வருஷநாட்டைச் சோ்ந்த இலவம் பஞ்சு வியாபாரி சதீஷ்குமாா் (36). இவா், ... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சின்னச்சாமிபாண்டியன் ம... மேலும் பார்க்க

புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளை பக்தா்கள் தவிா்க்க அறிவுறுத்தல்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்புபவா்கள் புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளைத் தவிா்க்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தினாா். இதுகுறித்து திங்கள்க... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்துக்குச... மேலும் பார்க்க