செய்திகள் :

சின்னமனூரில் சாலை விரிவாக்கப் பணி: நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

post image

சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.4.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சின்னமனூரிலிருந்து சுக்காங்கல்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையே குறுகலான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள், வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா்.

இதையடுத்து, இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையேயான சாலை ரூ.4.40 கோடியில் விரிவாக்கப் பணிகள் தொடங்கின.

இந்த சாலையை தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா, உதவிப் பொறியாளா் வைரக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் ... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடு... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து மூதாட்டி உடல் மீட்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆண்டிபட்டி வட்டம், சித்தையகவுண்டன்பட்டி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் மனைவி திருமலம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க