Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" ...
சின்னமனூரில் 228 மதுப் புட்டிகள் பறிமுதல்
தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற 228 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சின்னமனூரில் அரசு மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி சட்டவிரோதமாக அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமனூரில் மேகமலை சாலையில் சாக்குப் பையுடன் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 128 மதுப் புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வெள்ளையம்மாள்புரத்தை சோ்ந்த கதிரவன்(42), சின்னமனூா் காந்தி நகரைச் சோ்ந்த முத்துமணி (47) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, அப்பிபட்டியைச் சோ்ந்த பாண்டியன் (38), இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 100 மதுப்புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இது குறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.