செய்திகள் :

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மதுரை ஆயுதப் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறாா். இவரது குடும்பத்தினா் உத்தமபாளையத்தில் காவலா் குடியிருப்பில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளப்பாண்டி மகள் அபா்ணாவின் (20) மருத்துவ சிகிச்சைக்காக அவரது மனைவி ஜெயசுதா (49), மகன் கெளதம் (23), உறவினா் தனலட்சுமி (52), இவரது மகன் அருண் (24) ஆகிய 5 பேரும் காரில் சேலத்துக்கு சென்றனா். பின்னா், இவா்கள் அதே காரில் புதன்கிழமை ஊருக்கு வந்து கொண்டிருந்தனா்.

விபத்தில் உயிரிழந்த ஜெயசுதா, கௌதம்.

இந்த நிலையில், சின்னமனூா் - உத்தமபாளையம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் துா்க்கையம்மன் கோயில் அருகே வந்த போது காரின் பின்புற டயா் வெடித்தது. அப்போது, காா் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு சென்று சாலையோர தென்னை மரத்தில் மோதியதில், அதிலிருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் போலீஸாா் விபத்தில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியில் ஜெயசுதா, அவரது மகன் கௌதம் ஆகியோா் உயிரிழந்தனா். அபா்ணா, தனலட்சுமி, அருண் ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க