செய்திகள் :

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

post image

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவையடுத்து மாநிலத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று(ஆக. 4) காலமானார். அவருக்கு வயது 81.

சிபு சோரன் உடல்நலக்குறைவினால் புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.

அவரது மகனும் தற்போதைய முதல்வருமான ஹேமந்த் சோரன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். சிபு சோரன் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிபு சோரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக இன்று ஒருநாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முன்னாள் முதல்வர் சிபு சோரன் தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக ஜார்க்கண்டில்ஆக. 4 முதல் ஆக. 6 வரை 3 நாள்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த 3 நாள்களும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஆக. 4, 5 ஆகிய இரு நாள்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவைக்கு எட்டுமுறை தேர்வாகியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர். தற்போது இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

சிபு சோரன்

பிகார் மாநிலத்தோடு இருந்த ராம்கார் மாவட்டத்தில் சாந்தால் சமுதாயத்தில் பிறந்தவர் சிபு சோரன்.

1972 ஆம் ஆண்டு இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி மஹதோ தலைவர் பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து 'ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா' என்ற கட்சியை உருவாக்கினார். தொடர்ந்து 2000-வது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக வழிவகுத்த மாநில இயக்கத்தின் முக்கிய முகமாக சிபு சோரன் மாறினார்.

சிபு சோரன், முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு தும்காவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அந்த தொகுதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையாக மாறியது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவின் நலின் சோரன் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, தனது கோட்டையிலேயே சிபு சோரன் தோல்வியைத் தழுவினார்.

2005 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜார்க்கண்ட் முதல்வரானார் சிபு சோரன். ஆனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெறாததால், முதல்வராகப் பொறுப்பேற்று ஒன்பது நாள்களுக்குப் பின் பதவியை ராஜிநாமா செய்தார். பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்.

Jharkhand government announces a three-day state mourning after the demise of JMM founding patron and former CM Shibu Soren.

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உடற்கல்விக்கு ப... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரண்டு வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், பிகார் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்த... மேலும் பார்க்க

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.திருத்தணி... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த பழனி (36). கூலித் தொழிலாளி. இவரது தங்கை மகன்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47)... மேலும் பார்க்க