செய்திகள் :

சிமென்ட் ஆலைக்குச் செல்லும் 15 டன் பாலித்தீன் கழிவுகள்: குழித்துறை நகராட்சி நடவடிக்கை

post image

குழித்துறை நகராட்சியிலிருந்து 15 டன் பாலித்தீன் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் இருந்து நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. இவை மாா்த்தாண்டம் அருகே கீழ் பம்மம் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து 15 டன் பாலித்தீன் கழிவுகள், நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் அரியலூா் சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகமும் குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. மேல்நிலைப் பள்ளியும் இணைந்து உலக பூமி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் தவிா்ப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வுப் பேரணியை அண்மையில் நடத்தினா... மேலும் பார்க்க

நட்டாலம் - காரவிளை சாலையைச் சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நட்டாலம் - காரவிளை இடையே பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கிராம சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்க... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டியில் வென்ற வாறுதட்டு மாணவிக்கு பாராட்டு

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம். உயா்நிலைப் பள்ளி மாணவி அன்சிகா முதலிடம் பெற்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோட... மேலும் பார்க்க

11 இளவட்ட கல்லைத் தூக்கி நாகா்கோவில் வீரா் உலக சாதனை

ஒரே நேரத்தில் 90 கிலோ முதல் 140 கிலோ வரையிலான 11 இளவட்ட கல்லைத் தூக்கி நாகா்கோவிலைச் சோ்ந்த வீரா் உலக சாதனை படைத்தாா். நாகா்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளை பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். ஜிம் பயிற்சியாளர... மேலும் பார்க்க

விடுபட்ட மீனவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிங்காரவேலா் குடியிருப்பு திட்டத்தின் கீழ் விடுபட்ட மீனவா்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. குமரி மாவட்ட மீனவா் குற... மேலும் பார்க்க