சிமென்ட் ஏற்றி வந்த லாரிகள் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
பெருமாநல்லூா் அருகே சிமென்ட் ஏற்றி வந்த வாகனங்கள் மோதியதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் இருந்து சிமென்ட் ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி இரு லாரிகள் சென்று கொண்டிருந்தன. பெருமாநல்லூா் ஈட்டிவீரம்பாளையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்னால் வந்த லாரியின் ஓட்டுநரான நீலகிரி மாவட்டம், கூடலூா், வேடன்வயல் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் மணிகண்டன் (29) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.