செய்திகள் :

சிரியா: இருதரப்பு மோதலில் 100 பேர் பலி! தலையிடும் அரசுப் படைகள்!

post image

சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் இன மக்களுக்கும், பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்களைக் கட்டுப்படுத்த, அந்நாட்டின் இடைக்கால அரசின் படைகள் தலையிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரியா நாட்டில் சிறும்பான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வீடா மாகாணத்தில், கடந்த 2 நாள்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ட்ரூஸ் மற்றும் பெடோயின் இன மக்களுக்கு இடையிலான இந்த மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பித்து மோதல்களை முடிவுக்கொண்டு வருவதற்கு, சிரியாவின் இடைக்கால அரசின் படைகள், இன்று (ஜூலை 15) ஸ்வீடாவினுள் நுழைய, ட்ரூஸ் இனத்தின் மதகுருக்கள் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிரியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளின் படைகள் ஸ்வீடா நகரத்தினுள் நுழைவார்கள், என அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறை தலைவர் ஜெனரல் அஹ்மது தலாட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோதல்களில் தலையிடும் அரசுப்படைகள், இருதரப்பையும் பிரித்து வைக்க முயற்சிக்கும் எனக் கூறப்பட்டன. ஆனால், அவர்கள் ஸ்வீடாவில் ட்ரூஸ் மக்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, வெளியான செய்திகளில் சிரியா ராணுவம் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் படைகளுடன், அந்நகரத்தினுள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், ட்ரூஸ் இன மக்களின் பாதுகாவலராக தன்னை அடையாளப்படுத்தும் இஸ்ரேல், நேற்று (ஜூலை 14) சிரியாவினுள் நுழைந்து அந்நாட்டின் அரசுப்படைகளின் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி, பெடோயின் ஆயுதப்படையினர், ட்ரூஸ் குழுவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் பதில் கடத்தல்கள் நிகழ்ந்து அவை மோதல்களாக உருவாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 டிசம்பரில் பஷார் அல் - அஸாத் ஆட்சியைக் கவிழ்த்து அதிபர் அஹமத் அல்-ஷரா தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு

Forces of the country's interim government are reportedly intervening to control clashes between the Druze and Bedouin tribes in the Sweida province of Syria.

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எதிர்வினை

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடு... மேலும் பார்க்க

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைப்பு!

யேமன் நாட்டில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக யேமன் அரசு வட்டா... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் லெபனான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அரசு ... மேலும் பார்க்க