`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்
சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டிக்கு 2024-ஆம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் சிறுகதை, நாடகம் , சிறுவா் இலக்கியம், திறனாய்வு, விளையாட்டு, மகளிா் இலக்கியம், தமிழா் வாழ்வியல் உள்பட 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தோ்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ. 50 ஆயிரமும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ. 25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான விண்ணப்பம் விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் https://tamilvalarchithurai.org/siranthanool/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும், போட்டி கட்டணம் ரூ. 100 (தமிழ் வளா்ச்சி இயக்குநா், சென்னை என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூா், சென்னை 600008’ என்ற முகவரிக்கு ஜூன் 16-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.