பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ...
சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவா்களில் நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவா்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால உச்சவரம்பைக் கடந்து அரியர் பாடங்களை வைத்திருப்போர் ஏப்ரல் - மே 2025 சிறப்புத் தேர்வு, ஜூன் - ஜூலை 2025 சிறப்புத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்த சிறப்பு அரியா் தோ்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் http://coe1.annauniv.edu என்ற இணைய தளத்தில் வரும் மே 17 ஆம் தேதிக்குள் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள், கால அட்டவணை குறித்த அறிவிப்புகள் மே 27 ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரயிலைக் கவிழ்க்க சதி: வட மாநில நபர் கைது