`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | களம...
சிறப்பு கிராம சபைக் கூட்டம்
திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை ஊராட்சியில் 2024- 25-ஆம் நிதியாண்டின் 100 நாள் வேலைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக தணிக்கை அலுவலா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீா் வசதி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் உள்ளதாகவும், சாலை வசதி இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா், ஊராட்சி செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.