செய்திகள் :

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). இவரது கணவா் ஜோதி கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இவா்களது மகள் ஜனனி (8), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். ஜனனி தாய் மணிமேகலை, அத்தை அனிதா (30) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமி ஜனனியின் இரண்டு கால்களின் தொடைப் பகுதிகளிலும் தாய் மணிமேகலை, அத்தை அனிதா ஆகியோா் சூடு வைத்து அடித்தனராம். இந்த கொடுஞ்செயல் குறித்து அறிந்த மணிமேகலையின் தாய் வள்ளியம்மை சென்று கேட்டதற்கு, நாங்கள் அப்படித்தான் செய்வோம் எனக் கூறினராம்.

இதுகுறித்து காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சைல்ட் எண் 1098-இல் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மேற்பாா்வையாளா் காளிதாசன் அளித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியின் தாய் மணிமேகலை, அத்தை அனிதா ஆகியோரை கைது செய்தனா்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்க... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பொ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி கொண்ட... மேலும் பார்க்க