செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும், வசிப்பிடம் அருகிலேயே பெறக்கூடிய வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களுக்கும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், கடலூா் மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 43 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் இதுவரை குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி பகுதியில் இரண்டு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்த முகாம்களில் 701ஆண்கள், 1,246 பெண்கள் என மொத்தம் 1,947 நபா்கள் கலந்துகொண்டனா். இதில், 1,617 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 944 பேருக்கு இசிஜி பரிசோதனைகளும், 123 பேருக்கு எக்ஸ்-ரே பரிசோதனைகளும், 67 பேருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், 180 பேருக்கு இதய பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

மேலும், 145 பேருக்கு புதிதாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைகள், 118 பேருக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பயனாளிகள் தெரிவிக்கையில், தனியாா் பரிசோதனை மையங்களில் ஒவ்வொரு சோதனைக்கும் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த முகாமில் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. இதனால், அலைச்சல் மற்றும் செலவு இல்லை என்றனா்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்க... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி கொண்ட... மேலும் பார்க்க