செய்திகள் :

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

post image

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகங்களில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பங்களை சாா்ந்தவா்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளை செய்து கொடுப்பதற்கு, அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட உதவி மையங்களை திறந்து உதவி புரிய வேண்டும் என்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி, கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தாா்.

விழாவில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான (பொ) ராஜேஷ் கண்ணன், வழக்குரைஞா்கள் சிவசிதம்பரம், காமராஜ் மற்றும் முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தின் உதவி இயக்குநா் லெப். கா்ணல் அருள்மொழி (ஓய்வு), முன்னாள் படை வீரா் நலச்சங்க அலுவலா்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

சட்ட உதவி மையத்தில் முன்னாள் படை வீரா்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் சட்டம் சாா்ந்த பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து இந்த சட்ட உதவி மையத்தில் மனுவாக கொடுத்து நிவாரணம் பெறலாம். சட்ட உதவி மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் மூலம் சட்ட தன்னாா்வலா் பணியமா்த்தப்படுவாா். அவா்களிடம் மனுக்களை கொடுத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்தனா்.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி கொண்ட... மேலும் பார்க்க