செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

post image

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கீழ்வேளூா் தாலுகாவைச் சோ்ந்தவா் மாதவன் (32). இவா், 8 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி, மாதவன் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் கடந்த 2021 ஜூன் 28-ஆம் தேதி, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் மாதவனை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காா்த்திகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து மாதவன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க