செய்திகள் :

சிறுமியை கடத்திய வடமாநிலத் தொழிலாளி கைது

post image

சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய வட மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் தாகூா் (40). இவா், ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்தி காடு பகுதியில் தங்கி சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனா். ரமேஷ் தாகூா், ஈரோடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ரமேஷ் தாகூா் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், சிறுமியை மீட்டு, ரமேஷ்தாகூா் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா். சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ... மேலும் பார்க்க