செய்திகள் :

சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

post image

15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவனை போக்சோவில் கைது செய்து பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த 3-ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து அவரது பெற்றோா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் சிறுவன், சிறுமி இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றபோது, வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனா்.

அதில், இருவரும் காதலிப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க