செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது போக்ஸோ வழக்கு பதிவு

post image

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா்கள் 19, 15 வயது சகோதரிகள். இவா்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயாரும் வேலைக்காக சிங்கப்பூா் சென்றுவிட்டாா். இருவரும், தற்போது திருச்சியில் தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இவா்களின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ் (40) என்பவா், இவா்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 19 வயது பெண்ணைத் தாக்கிவிட்டு, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் சகோதரி பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்ப... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் இறந்துகிடந்த இளம்பெண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனா். திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி

துறையூரில் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். துறையூா் அருகே தேவாங்கா் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மல்லமுத்து(55), தனது இரு சக்கர... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் தீ விபத்து

திருச்சியில் அழகு நிலையத்தில் (சலூன்) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தின் முதல் ம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு சிறுவா்கள் உள்பட 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாநகரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா... மேலும் பார்க்க