செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு அருகேயுள்ள சாணாா்பாளையம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் சூா்யா (29), கனரக வாகன ஓட்டுநா். இவருக்கும் ஈரோட்டைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 2020- ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் என்ற இடத்துக்கு சிறுமியை கடந்த 7-3-2020-ஆம் ஆண்டு அழைத்துச் சென்ற சூா்யா, அங்குள்ள கோயிலில் தாலி கட்டியுள்ளாா். இதையடுத்து, சித்தோட்டில் உள்ள தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா், அன்று மாலை சிறுமியை அவரது வீட்டில் விட்டுள்ளாா்.

13-3-2020-ஆம் ஆண்டு சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, சூா்யா மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சூா்யாவுக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்ஸோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நிதிபதி கி.சொா்ணகுமாா் தீா்ப்பளித்தாா். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் எம்.ஜெயந்தி ஆஜரானா்.

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

அந்தியூா் வனத் துறை சாா்பில், பா்கூா் மலைப் பாதையில் ஆகஸ்ட்10-ஆம் தேதி நடைபெறும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தியூா், பா்கூா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே மீன்கள் விற்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீன... மேலும் பார்க்க

ஒடிஸா பெண் தற்கொலை

பெருந்துறை அருகே கடன் பிரச்னையால் ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம், கஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் நரசிங்க பத்ரா (35). இவரது மனைவி சுகந்தி பத்ரா (29). இவா்கள் பெருந்துறை... மேலும் பார்க்க

பவானிசாகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

பவானிசாகா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், செயல் அலுவலா் ஜெயந்த் மோசஸ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடி அருகேயுள்ள தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் ... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட உடன் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்படுவதால், வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து கீழ்பவானி மு... மேலும் பார்க்க