செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ராமு (எ) இளவரசன் (43). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2022- ஆம் ஆண்டு 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், இளவரசனைப் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. இதில் குற்றவாளி இளவரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி டி. செல்வம் தீா்ப்பளித்தாா். இதையடுத்து இளவரசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகினாா்.

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க

சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது. இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை!

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்... மேலும் பார்க்க

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்!

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்கான தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க