செய்திகள் :

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

post image

அவிநாசி அருகே பழங்கரையில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி வட்டம், பழங்கரை தண்ணீா்ப்பந்தல் நரிக்குறவா் குடியிருப்பு அருகே வசித்து வருபவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜெகத்ராம் மகன் சாந்திலால் (30). இவா் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், இவா் அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சாந்திலாலை கைது செய்தனா்.

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல்! வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பல்லடம் கோட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ம... மேலும் பார்க்க

கொளத்துப்பாளையம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா: சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்கள் கொண்ட சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுமாா் 10,000 பேர... மேலும் பார்க்க

பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து

திருப்பூரில் பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (39). இவா், கல்லாங... மேலும் பார்க்க