செய்திகள் :

பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து

post image

திருப்பூரில் பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (39). இவா், கல்லாங்காடு பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். நிறுவனத்தில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது, நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பனியன் துணிகள் மற்றும் ஆடைகளில் தீப்பரவியது.

தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா்.

இதில், தையல் இயந்திரங்கள், துணிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: திருப்பூா், குமரானந்தபுரத்தை அடுத்த கோட்டை மாரியம்மன் கோயில் 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ராஜா (50). இவா், கிழக்கு நல்லாத்துப்பாளையம் அருகேயுள்ள முருகன் நகரில் பழைய அட்டை மற்றும் பேப்பா் விற்பனை செய்யும் கிடங்கு நடத்தி வருகிறாா். இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறினா்.

திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் அட்டைகள் மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்ப... மேலும் பார்க்க