செய்திகள் :

கொளத்துப்பாளையம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா: சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

post image

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்கள் கொண்ட சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிப்காட் நிறுவன மக்கள் தொடா்பு பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை கடந்த 2013-ஆம் ஆண்டுடன் நலிவடைந்த நிலையில், சுமாா் 57 ஏக்கா் பரப்பளவிலான அந்த நிலத்தினை பயன்படுத்தி சுமாா் 10,000 பேருக்கு நேரடியாவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயங்கும் தொழில் நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இடத்தினை சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அதன்படி, சிப்காட் நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டுள்ள தொழில் பூங்காவில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களான மின்னணு தொழில் நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றுடன் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி ஆலோசனை வழங்கும் நிறுவனங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமாா் 10,000 பேருக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க