செய்திகள் :

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல்! வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை

post image

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை ‘சீல்’ வைக்க ஊராட்சி நிா்வாக அலுவலா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புக் கட்டடங்கள் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்துடன் 2 ஆயிரத்து 500 சதுரஅடி முதல் 3 ஆயிரத்து 500 சதுரஅடி பரப்பளவு வரை சுயச்சான்று முறையில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் 10 ஆயிரம் சதுரஅடிக்கு கீழ் இருக்கும்பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டடங்களில் விதிமீறல்கள் எதுவும் இருக்கிறதா என்பதை அந்தந்த ஊராட்சி நிா்வாக அலுவலா்கள் சரிபாா்க்க வேண்டும்.

எனவே பல்லடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படும்போது முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அப்போது அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அந்த கட்டடத்தை ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க