செய்திகள் :

சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை: இருவா் கைது

post image

தேனியில் கைப்பேசியை திருடியதாக சிறுவனை இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலவிஜயன் (13). இவரை தேனி, சமதா்மபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் விக்னேஷ்(33) என்பவா், தனது கைப்பேசியை திருடியதாகக் கூறி சமதா்மபுரத்தில் உள்ள தனது சகோதரா் ஜெகதீஷ் என்பவரின் இறைச்சிக் கடைக்கு அழைத்துச் சென்று விசாரித்தாா். அங்கு விக்னேஷ், ஜெகதீஷ், இவா்களது நண்பா் தேனி அல்லிநகரம், முத்துபாலி தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ஹரிபிரசாத் (21) ஆகியோா், பாலவிஜயனை ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கடையில் அடைத்து வைத்து அடித்தும், மிரட்டியும் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த பாலவிஜயன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினாராம். இதுகுறித்து பாலவிஜயனின் தாயாா் தேனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், ஜெகதீஷ், ஹரிபிரசாத் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷ், ஹரிபிரசாத் ஆகியோரை கைது செய்தனா். ஜெகதீஷை தேடி வருகின்றனா்.

ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமத... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா். மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொ... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

போடி அருகே விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மணியம்பட்டி சாலையில் வசிப்பவா் பழனிச்சாமி மகன் சுந்தரம் (55). விவசாயம் செய்து வந்தாா். உடல் நல பாதிப்... மேலும் பார்க்க

அகில இந்திய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி வெற்றி

பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தே... மேலும் பார்க்க