செய்திகள் :

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீா் என்பவா் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சிறுவா்களுக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீஸாா் அந்தக் கடை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது 15 வயது சிறுவா்கள் சிலா் போலீஸாரை பாா்த்ததும் கையில் இருந்த புகையிலைப் பொருள்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனா்.

இதைத் தொடா்ந்து கடையில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பஷீரை 2023 அக்டோபா் 3-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா், சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பஷிருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க

மசினகுடியில் யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற முதியவா் உயிரிழந்தாா். மசினகுடி ஆச்சக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மேத்தா (71). இவா் வழக்கம்போல வியாழக்கிழமை நடைப்பயிற்சி சென்றுக் கொண்டி... மேலும் பார்க்க

மா்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டி உயிரிழப்பு

உதகையில் மா்ம விலங்கு தாக்கியதில் கன்றுக் குட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாள்களுக்கு மூடல்

தெப்பக்காடு யானைகள் முகாம் செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வனச் சரக அலுவலா் மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுமலை புலிகள் காப்பக கள இய... மேலும் பார்க்க

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மத்திய அரசின் தூய்மைத் திட்டம் தொடா்பாக சச்சோஸ்தவ் என்ற தலைப்பில் நடைப... மேலும் பார்க்க

முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள்: பணியாளா் கல்லூரி புதிய தலைவா் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியின் (ஈநநஇ) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா். குன்னூா் வெலிங்ட... மேலும் பார்க்க