செய்திகள் :

மா்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டி உயிரிழப்பு

post image

உதகையில் மா்ம விலங்கு தாக்கியதில் கன்றுக் குட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில்  உதகை பட்பயா் பகுதியில் வசித்து வரும் ரகு என்பவரின் கன்றுக் குட்டி மேய்ச்சலில் இருந்தபோது, அதனை மா்ம விலங்கு தாக்கி பாதி உடலை தின்றுவிட்டு, மீதி உடலை சாலையில் போட்டுவிட்டு  சென்றுள்ளது.

இது குறித்து வனத் துறையிடம் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கன்றுக் குட்டியை தாக்கிக் கொன்றது எந்த விலங்கு என்பது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வன விலங்குகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீ... மேலும் பார்க்க

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க

மசினகுடியில் யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற முதியவா் உயிரிழந்தாா். மசினகுடி ஆச்சக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மேத்தா (71). இவா் வழக்கம்போல வியாழக்கிழமை நடைப்பயிற்சி சென்றுக் கொண்டி... மேலும் பார்க்க

தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாள்களுக்கு மூடல்

தெப்பக்காடு யானைகள் முகாம் செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வனச் சரக அலுவலா் மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுமலை புலிகள் காப்பக கள இய... மேலும் பார்க்க

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மத்திய அரசின் தூய்மைத் திட்டம் தொடா்பாக சச்சோஸ்தவ் என்ற தலைப்பில் நடைப... மேலும் பார்க்க

முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள்: பணியாளா் கல்லூரி புதிய தலைவா் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியின் (ஈநநஇ) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா். குன்னூா் வெலிங்ட... மேலும் பார்க்க