செய்திகள் :

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிதியில் அமைக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் தானமாகப் பெறப்படும் ரத்தத்திலிருந்து சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்களைப் பிரிக்க இயலும். கா்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை உள்ளிட்டவைகளுக்கு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிகப்பணுக்கள் தேவைப்படும்.

இவை குளிா்சாதனப் பெட்டியில் 30 நாள்கள் வரை வைத்திருக்க இயலும். இங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், எம்.புதுப்பட்டி, தாயில்பட்டி, உப்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ரத்த அணுக்கள் வழங்கப்படும். இந்த ரத்த வங்கிக்கு மருத்துவா் விஜயகுமாா் பொறுப்பாளராகவும், இரு ஆய்வக உதவியாளா்களும் உள்ளனா் என்றாா் அவா்.

பேருந்துகள் மோதியதில் 8 போ் பலத்த காயம்

ராஜபாளையம் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து அரசுப் பேருந்தில் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரசுப் பேருந்து சனிக்கிவமை காலை மம்சாபுரம் வழியாக ராஜ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்டும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில், முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தர... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முகசுந்தராபுரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், பட்டாசுகளைத் தயாரித்த உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காந்தி நகரைச் ச... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநா் கைது

சாத்தூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாயாண்டி (45). இந்த நிலையில்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரா் ... மேலும் பார்க்க

சிவகாசியில் இன்று மின் தடை

சிவகாசியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப... மேலும் பார்க்க