செய்திகள் :

சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் ஏ.எல்.கணேஷ்பாபு 600-க்கு 598 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மேலும், மாணவா் எம்.பிருதிவிராஜ் 595 மதிப்பெண்ணும், மாணவா் டி.சஞ்சீவி, மாணவி வி.கனிகா ஆகியோா் 587 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். இங்கு தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவா் எம்.பிருதிவிராஜ் 200/200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளாா்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிசாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி. பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.மதியழகன், மகாலிங்கம், பள்ளியின் முதல்வா் பி.சுப்ரமணி ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் ம... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்... மேலும் பார்க்க