உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகா...
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், சொக்கா்கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சனிப்
பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.