செய்திகள் :

தோட்டாக்களுடன் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது!

post image

அரக்கோணம்: தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நகரமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸார் அரக்கோணத்தை அடுத்துள்ள மங்கம்மா பேட்டையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒருவரிடம் இரு துப்பாக்கிகளும் 4 தோட்டாக்களும் இருந்தது தெரிய வந்தது. உடனே வாகனங்களுடன் துப்பாக்கிகள் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அரக்கோணம் நேருஜி நகரை சேர்ந்த கே.எம். பாபு(37) மற்றொருவர் அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த திணேஷ் குமார்(32) என்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கே எம் பாபு, அரக்கோணம் நகர மன்ற ஆறாவது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அப் பதவியில் இருந்து வருகிறார். இவர்களிடமிருந்து ஒரு ஏர்கன், ஒரு ரிவால்வர் இரு துப்பாக்கிகளும் மற்றும் 4 தோட்டாக்களும் அவர்கள் வந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாபு போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு தினேஷ்குமார் ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு ஏர்கன் ஒரு ரிவால்வர் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளை கொடுக்கும் போது தனக்கு 4 தோட்டாக்களையும் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் போலீசார் தினேஷ் குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில், நகர மன்ற உறுப்பினர் கே எம் பாபுவை 4 பேர் கத்தியால் வெட்டியதும், இச்சம்பவத்தில் கே எம் பாபு அவரின் தந்தையார் மணி உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்ததும், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!

அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பேராவூரணியில் லாரி - பைக் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருள்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள... மேலும் பார்க்க

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் எச்சரிக்கை

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணி நேரத்த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத... மேலும் பார்க்க

அதிமுகவிடம் பதற்றம் வெளிப்படுகிறது: தொல். திருமாவளவன்

திமுகவோடு பாஜக நெருங்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் அவர்... மேலும் பார்க்க