செய்திகள் :

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

post image

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

தாளவாடியில் இருந்து கோடிபுரம் செல்லும் சாலையில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம், கோவை செல்வது வழக்கம்.

கோடிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் தேவைக்காக காலை, மதியம், மாலை, இரவு என தாளவாடியில் கோடிபுரத்துக்கு 6 முறை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக காலை 11.30 மணிக்கு தாளவாடியில் இருந்து கோடிபுரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கோடிபுரம் மக்கள் தாளவாடி பேருந்து நிலையத்தில் திரண்டனா். கோடிபுரத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாற்று வழித்தடத்தில் அனுப்ப தயாராக இருந்த கோடிபுரம் அரசுப் பேருந்தை தாளவாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

அங்கு வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசாா் ஞாயிற்றுக்கிழமைதோறும் பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும... மேலும் பார்க்க

அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு

பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு

ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாக... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்

கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிக... மேலும் பார்க்க