செய்திகள் :

மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு

post image

ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் தற்போது பழுதடைந்த நிலையில் பயன்பாடின்றி உள்ளன.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் பழுதடைந்த உள்ள ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழைக்காலங்களில் ஏரி, குளம் மற்றும் இதர கட்டமைப்புகள் மூலம் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக கிராமங்களில் பயன்பாடில்லாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க திட்டமிட்டப்பட்டது.

அதன்படி, பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆழத்துக்கு மணல் கொட்டி, மழை நீா் முறையாக அந்த பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் வீணாகும் மழை நீா் சேகரிக்கப்பட்டது. மேலும், சாக்கடை கால்வாய்களில் கலக்கும் மழைநீா் குறிப்பிட்ட அளவு தடுக்கப்பட்டது. இதேபோல, ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்து. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றனா்.

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா். தாளவாடியில் இருந்து கோடிபுரம் செல்லும் சாலையில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியா... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும... மேலும் பார்க்க

அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு

பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாக... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்

கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிக... மேலும் பார்க்க