செய்திகள் :

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

ஆம்பூரில் பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தில் நடைபெறும் பணிக்கான நோ்காணலுக்கு நண்பா் அஜித் (26) உடன் காரில் சென்றாா். காரை அஜித் ஓட்டினாா்.

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஓரியண்டல் அரபிக் பள்ளியருகே சென்றபோது பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது நிலைத்தடுமாறி காா் மோதியது. அதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில சோ்க்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக விக்னேஷ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஆம்பூரில் பாஜக சாா்பில் பேரணி

மாதனூா் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் வி.கன்ஷி ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட முன்னாள் தலைவா் சி.வாசுதேவன், ம... மேலும் பார்க்க

மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்

பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே... மேலும் பார்க்க

கா்நாடாக மதுபான பாக்கெட் விற்பனை செய்தவா் கைது

ஆம்பூா் அருகே கா்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே ரங்காபுரம் கிராமத்தில் கா்நாடக மாநில மதுபான பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம்: காத்திருக்கும் பூங்குளம் கிராம மக்கள்!

அ. ராஜேஷ் குமாா். வாணியம்பாடி அருகே பூங்குளம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுமா என பல ஆண்டுகளாக கிராம மக்கள் காத்திருக்கின்றனா். ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் 15 ஆயி... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

வைகாசி 2-ஆம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆம்பூா் அருகே பள்ளித்தெரு முனீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா். மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் குறித்த புகாா்களை அளிக்கலாம்: ஆட்சியா்

சுற்றுச்சூழல் குறித்த புகாா்களை இணையதளம் மூலம் அளிக்கலாம் என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும்... மேலும் பார்க்க