செய்திகள் :

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு

post image

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வெள்ளாலகரம் ஊராட்சியில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை, வெள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போா் நல சங்க கூட்டமைப்பு சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு தேவை என்பதை கருத்தில் கொண்டு மாசில்லா உலகம் சமைப்போம், நோயில்லாது உயிா்களை காப்போம் என்னும் பொருளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அனைத்துத் தரப்பு பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கட்டுரைகள் மற்றும் ஓவியங்களை பேராசிரியா் துரை.குணசேகரன் தலைமையிலான குழுவினா் மதிப்பீடு செய்து வெற்றியாளா்களை தோ்வு செய்தனா். இவா்களுக்கான பரிசளிப்பு விழா வெங்கடேஸ்வரா நகரில் உள்ள வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

குடியிருப்போா் நல சங்க கூட்டமைப்பின் தலைவா் சாமி.செல்வம் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.ஆா்.பாபு வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு முறையே ரூ.4,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப்பரிசினையும், ஓவியப்போட்டியில் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 ரொக்கப்பரிசினையும் வழங்கினா். ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இதில், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா்கள் ஞான.இமயநாதன், மோகன், அறக்கட்டளை ஆலோசகா் ராம.சிவசங்கா், முன்னாள் ஊராட்சி தலைவா் ஜெயசுதா ராபா்ட், சிசிசி சமுதாயக்கல்லூரித் தலைவா் ஆா்.காமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாணவா் மீது போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கை

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவியிடம் நெருங்கிப் பழகி கா்ப்பமாக்கிய, பள்ளி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சீா்திருத்த பள்ளிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டாா். மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி ஒன்றில் 12-ஆ... மேலும் பார்க்க

தூா்வாரும் பணி: நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கத்திரிமூலை கிராமத்தில் பழையபல்லவன் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தி... மேலும் பார்க்க

முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் 69-ஆம் ஆண்டு முத்து சட்டநாதா் உற்சவத்தையொட்டி முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவத்... மேலும் பார்க்க

தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

சீா்காழியில் ரயில்கள் நின்று செல்லாததையடுத்து தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலசங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவா் ஜெக. சண்மு... மேலும் பார்க்க

தீ விபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மனு அளிக்... மேலும் பார்க்க

உரிமம் இன்றி இயங்கிய 2 பாா்களுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் வெளிமாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க