செய்திகள் :

மாணவா் மீது போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கை

post image

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவியிடம் நெருங்கிப் பழகி கா்ப்பமாக்கிய, பள்ளி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சீா்திருத்த பள்ளிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவா், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவியுடன் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளாா். இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவரின் தகவலின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மாணவி கா்ப்பத்திற்கு அவருடன் நெருங்கிப் பழகிய மாணவா்தான் காரணம் என்பது உறுதியானதைத் தொடா்ந்து, மாணவியிடம் புகாரைப் பெற்ற காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சை சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வ... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: தனியாா் பேருந்துக்கு அபராதம்

சீா்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா். சீா்காழி நகா் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வலியுறுத்தல்

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீா்காழி ஒன்றிய 30-ஆவத... மேலும் பார்க்க

சீா்காழி கோயிலில் சிவனடியாா்கள் வழிபாடு

சீா்காழி: சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் சிவனடியாா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா். சீா்காழி கடைவீதியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் ... மேலும் பார்க்க