செய்திகள் :

சிவலிங்கத்தை கையில் தாங்கிய சித்தர்

post image

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை } வாலாஜாபாத் வரும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அய்யம்பேட்டையில் மோகாம்பரி அம்மன் கோயில் எதிரில் சாலை அருகே உள்ள அஸ்தலிங்கேசுவரர் என்ற சித்தர் கோயில் அமைந்துள்ளது.

சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செங்கோடைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சிவபக்தர் பல தலங்களை வழிபட்டு, தில்லை சிதம்பரம் சென்றடைந்தார். அங்கு சிவனிடம் லிங்கத்தைப் பெற்று, சித்தராக மாறி அஸ்தலிங்க சித்தர் என்று பெயர் பெற்றார். பின்னர், வடநாட்டு வழிபாட்டுத் தலங்களை வழிபட்டு, அய்யம்பேட்டையில் தங்கினார்.

அவர் இங்கு வாழ்ந்தபோது அவரது இரு சீடர்களான ஞானமணி சுவாமிகள், பொட்டி சாமி என்ற பிரம்மானந்த சுவாமிகள் ஆகிய மூவரும் மக்களின் குறைகளைப் போக்கினார்கள். அஸ்தங்கர் என்ற சித்தர் தனது வலதுகையில் சிவலிங்கத்தை எப்பொழுதும் வைத்திருந்ததால், "ஹஸ்தலிங்கேசுவரர்' என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயர், மாற்றம் பெற்று அஸ்தலிங்கேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

அஸ்தலிங்கசித்தர் தமது இறுதிக் காலத்தில் சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி, கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஞானமணி சித்தருக்கும் இவ்வூரிலும், பொட்டிசாமி சித்தருக்கு முத்தியால்பேட்டையிலும் கோயில்கள் உள்ளன. இரு சித்தர்களின் அடையாளமாக அஸ்தலிங்கேசுவரர் கோயில் கருவறையில், லிங்கத்தின் இரு பக்கங்களிலும் நந்தியெம்பெருமானின் சிற்பத் திருமேனிகள் உள்ளன. லிங்கத்தின் இருபுறமும் நந்தி சிற்பங்கள் காணப்படுகின்றன.

அஸ்தலிங்கர் தியான மண்டபத்தில் தியானித்தால் நமது துன்பங்கள் முற்றிலும் அகலுவதை உணர முடியும். கோயிலுக்கு எதிரில் காரிய சித்தி விநாயகர் கோயில் கருவறையில் வலம்புரி விநாயகராக வடக்கு நோக்கி காட்சி அளிப்பது சிறப்பானது. தலமரமான வன்னிமரத்தை பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தம் எண்ணம் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். கோயிலில் திருமணம் நிறைவேற அவிட்டம், கேட்டை நட்சத்திர நாள்களில் வலம்புரி விநாயகருக்கு நெல்பொரியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

}கி. ஸ்ரீதரன்,

(தொல்லியல்துறை } பணி நிறைவு).

வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும். "... மேலும் பார்க்க

கபாலி கற்பகாம்பாள் திருக்கல்யாணம்

"மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற பெருமையுடையது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் பார்வதிதேவி மயிலாக வடிவெடுத்து, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூஜித்து கபாலீஸ்வரர் அருள் ... மேலும் பார்க்க

கவலைகள் நீக்கும் கருணாமூர்த்தி

வட மொழியில் "திந்திரிணி' என்பது புளியமரத்தைக் குறிக்கும். "திந்திரிணிவனம்' மருவியே "திண்டிவனம்' ஆனது. "திண்டி' என்றால் "அடர்ந்த' எனப் பொருள். காஞ்சிபுரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது, நான்கு திசைகளுக்க... மேலும் பார்க்க

தோஷங்கள் நீங்கி நலம்பெற...

சோழ நாட்டு நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குவது "புள்ளிருக்கு வேளூர்' எனும் வைத்தீஸ்வரன் கோயிலாகும். இது பரிகாரத் தலமாக விளங்க, அதற்கு இணையாக காவிரியின் தென்கரையின் தேவார... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 14 - 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)உடனிருப்போருடன் பெர... மேலும் பார்க்க

தேர்வு பயம் தீர...

திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்... மேலும் பார்க்க