செய்திகள் :

சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?

post image

சீனாவின் குயிசூ மாகாணத்தின் இருவேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் 19 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயிசூ மாகாணத்தின் சாங்க்‌ஷி மற்றும் குவோவா ஆகிய பகுதிகளில் இன்று (மே 22) அதிகாலை 3 மணி மற்றும் 8 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில், சாங்க்‌ஷியில் 2 பேரும், குவோவாவின் கிங்யாங் கிராமத்தில் சுமார் 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் நிலச்சரிவினுள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சுமார் 19 முதல் 21 பேர் நிலச்சரிவினுள் சிக்கி மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வெளியான தகவலினால் அப்பகுதி முழுவதும் அந்நாட்டு காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் லைஃப் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் நிலச்சரிவினுள் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

குவோவா நகரம் முழுவதும் செங்குத்தான சரிவுகள் மற்றும் மலைப்பகுதிகளாக உள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் குயிசூ மாகாண அரசு, புவியியல் பேரழிவுகளுக்கான இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

ஆனால், சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், இன்று காலை 11 மணியளவிலேயே, புவியியல் பேரழிவுகளுக்கான அவசரகால பதிலை மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலையாக உயர்த்தியதுடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க:வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க