செய்திகள் :

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

post image

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரோங்ஜியாங்கிலுள்ள துயிலு ஆற்றின் நீர்மட்டமானது, உயர்நிலை வெள்ள அளவான 253.5 மீட்டரை இன்று (ஜூன் 28) மாலை 5 மணியளவில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உள்நாட்டு வெள்ள கட்டுபாடு மற்றும் வறட்சி மீட்புத் துறை தலைமைச் செயலகம், வெள்ள அபாய எச்சரிக்கை நிலையை, 2-ல் இருந்து 1 ஆக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை ரோங்ஜியாங் மாவட்டத்தில் இருந்து 48,900 பேரும், கோங்ஜியாங் மாவட்டத்தில் இருந்து 32,000 பேரும் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சீனாவில் வெள்ள அபாயத்தை அறிவிக்கும் விதமாக 4 நிலை எச்சரிக்கை முறைகள் வழக்கத்திலுள்ளன. இதில், 1 ஆம் நிலை என்பது மிக மிக அதிகளவில் வெள்ளம் ஏற்படும் சூழலில் மட்டுமே பெரும்பாலும் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் ரோங்ஜியாங் மாகாணத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உச்சகட்ட நீர் ஓட்டம் வினாடிக்கு 11,360 கியூபிக் மீட்டர்களாக உயர்ந்துள்ளது.

மேலும், ரோங்ஜியாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Authorities in China's Guizhou province have again issued a high flood warning as floodwaters continue to rise in Rongjiang County.

இதையும் படிக்க: ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க

ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்! 16 வீரர்கள் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டிற்குள் செயல்படும் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்குவாவின், வ... மேலும் பார்க்க