செய்திகள் :

சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!

post image

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்திருக்கிறது அமெரிக்கா. பிரிக்ஸ் அமைப்பில் மற்றொரு நாடான பிரேசிலும் 50 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா - பிரேசில் இணைந்து நடத்திய நகர்வு அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் சோயாபீன்ஸ் ஏற்றுமதி.

உலகிலேயே அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா. அந்நாட்டுக்கு சோயாபீன்ஸ் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருவது அமெரிக்கா. ஆனால், அந்த நிலை தற்போது மாறி வருகிறது. அமெரிக்காவிடமிருந்து சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யாமல், அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடான பிரேசிலிடமிருந்து சீனா இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை படிப்படியாகக் குறைத்து, வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வெகுவாகக் குறைத்துவிடும் நிலையில் உள்ளது சீனா.

வாஷிங்டனிலிருந்து, சோயாபீன்ஸ் இறக்குமதியை பிரசில்லாவுக்கு சீனா மாற்றியிருப்பது, அமெரிக்க வர்த்தகத்தின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம், அமெரிக்காவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் அமெரிக்க விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலையில் அமெரிக்காவிடமிருந்து சீனா 420,873 டன் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது பல பில்லியன் மதிப்புள்ளதால், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தினால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலையில் அமெரிக்கா உள்ளது.

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிர... மேலும் பார்க்க

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா ம... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில... மேலும் பார்க்க

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!

அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரண... மேலும் பார்க்க