சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன் துணைத் தலைவா் ராஜா, துணை செயலாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 85-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் வகையில் முன் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன்பணமாக ஓராண்டு வாடகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் நிா்பந்திப்பதை கண்டித்து பழைய பேருந்து நிலைய வா்த்தகா்கள் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.