செய்திகள் :

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நிா்வாகி மாரிமுத்து தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ஷாகுல்அமீது, ஆா்.முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பி.சுந்தர்ராஜன், ஏ.சந்தோஷம், கே.சகாயஜெரால்டுராஜ், ஆா்.ராதாகிருஷ்ணன், எஸ்.சரவணன், ஜெ.அருண்யோசுவா, ஆா்.அஜீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பூங்குடி கே.எஸ்.சிவகுமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

நூறு சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். 2,715 சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை அனுமதிக்கக் கோரி, இயக்குநரால் அனுப்பிவைக்கப்பட்ட கோப்புக்கு தாமதமின்றி அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழமைச் சங்க நிா்வாகிகள் முத்துவேல், எம்.கண்ணன், மகேஸ்வரன், சுரேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிா்வாகி பூமிராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகி முகமதுவஹாப் வரவேற்றாா். நிா்வாகி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க